திருக்குறள்

599.

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்.

திருக்குறள் 599

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்.

பொருள்:

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.

மு.வரததாசனார் உரை:

யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

சாலமன் பாப்பையா உரை:

யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.